» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 4 போலீசாருக்கு கரோனாதொற்று உறுதி

சனி 25, செப்டம்பர் 2021 10:21:27 AM (IST)

fதூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் 4 போலீசாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக் குடி மாவட்டத்தில் நேற்று காலை வெளியான பரிசோதனை அறிக்கைப்படி 12 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 55 ஆயிரத்து 740 ஆனது. சிகிச்சை பெற்று வந்த 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 55,218 ஆக உள்ளது. மேலும் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு மாவட்டத்தில் இதுவரை 401 பேர் பலி யாகி உள்ளனர். தற்போது 121 பேர் பாதிக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் சிகிச்சையில் உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து தொற்று பாதிப்பு மாவட்டத்தில் குறைந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு டவுன் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் எஸ்ஐ ஒருவருக்கு கரோனா உறுதியானது. இதையடுத்து இந்த காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ள அறிவறுத்தப்பட்டனர். மேலும் காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி- தெளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இதே காவல் நிலையத்தில் மேலும் 3 போலீசாருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தனி மைப்படுத்தப்பட்டு உள்ளனர். சிலருக்கு காய்ச்சல், இருமல் இருப்பதால் அவர்களும் சிகிச்சைக்கு உட்படுத் தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக தொற்று குறைந்துள்ள நிலையில் 4 போலீசாருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது காவல் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory