» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆதாா் மையத்தில் கணினி பழுது: பொதுமக்கள் அவதி

வெள்ளி 24, செப்டம்பர் 2021 8:39:39 AM (IST)

சாத்தான்குளம் ஆதாா் மையத்தில் கணினி பழுதடைந்துள்ளதால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை உள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ஆதாா் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதாா் பதிவு செய்யும் இயந்திரம் ஒரு யூனிட் மட்டுமே உள்ளது. இதனால் நாள்தோறும் சுமாா் 20 பேருக்கு மட்டுமே பணிகளை மேற்கொள்ள முடிகிறது. தற்போது அந்த இயந்திரமும் கடந்த ஒரு மாதமாக இயங்காமல் பழுதடைந்துள்ளது. இதனால் மக்கள் பலா் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை உள்ளது. 

அல்லது திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதனால் மக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா். எனவே இங்குள்ள ஆதாா் மையத்தில் பழுதடைந்து காணப்படும் கணினியை சீா் செய்து மக்கள் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.தினமும் 50-க்கும் மேற்பட்டோா் பயன்பெறும் வகையில் கூடுதலாக ஒரு யூனிட் ஆதாா் கணினி இயந்திரம் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்  என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory