» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை உட்பட 11 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கைது

புதன் 22, செப்டம்பர் 2021 11:09:16 AM (IST)

கோவில்பட்டியில் கொலை, கொலை முயற்சி உட்பட 11 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுப்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் மேற்பார்வையில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது கோவில்பட்டி பாரதிநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த கோவில்பட்டி பாரதி நகரைச் சேர்ந்த முருகன் மகன் சூர்யா (21) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. 

உடனே மேற்படி போலீசார் அவரை கைது செய்தனர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட சூர்யா மீது கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 3 வழக்குகளும், கிழக்கு காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உட்பட 5 வழக்குகளும், கழுகுமலை காவல் நிலையத்தில் 2 வழிப்பறி வழக்குகளும், திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும் என மொத்தம் 11 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital







Thoothukudi Business Directory