» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பெண்ணிடம் செல்போன் பறிப்பு : சிறுவன் போலீசில் ஒப்படைப்பு!
புதன் 22, செப்டம்பர் 2021 10:41:53 AM (IST)
தூத்துக்குடியில் பெண்ணிடம் செல்போன் பறித்த சிறுவனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி கதிர்வேல் நகரைச் சேர்ந்தவர் சேகர் மனைவி கலா (35). இவர் அப்பகுதியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். நேற்று மில்லர்புரம் பகுதியில் சாலையில் செல்போன் பேசிக்கொண்டே நடந்து சென்றுள்ளார். அப்போது பைக்கில் வந்த 2பேர் அவரது செல்போனை பறித்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து கலா கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் செல்போன் பறித்த நபர்களில் ஒருவரை விரட்டி பிடித்தனர் மற்றொருவர் தப்பியோடி விட்டார். பின்னர் பிடிபட்ட நபரை பொதுமக்கள் சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் செல்போன் பறித்தது 13 வயது சிறுவன் எனத் தெரியவந்தது. மேலும் தப்பியோடிய மற்றொரு சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.