» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இயேசு விடுவிக்கிறார் அறக்கட்டளை சார்பில் மரம் நடு விழா!

சனி 18, செப்டம்பர் 2021 3:21:07 PM (IST)



குரும்பூர் அருகிலுள்ள வடக்கு நல்லூரில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறக்கட்டளை சார்பில் மரம் நடும் விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறக்கட்டளை சார்பில் புதுவாழ்வு சங்கத்தின் சமூக சேவை அமைப்பின் இயற்கை காப்போம் திட்டத்தின்கீழ் 2021-2022 ஆம் ஆண்டில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வடக்கு நல்லூரில் மரம் நடும் விழா நடைபெற்றது. 

விழாவிற்கு ஊர் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். அர்ஜூனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசன், விழா ஒருங்கிணைப்பாளர் மணத்தி எட்வின், இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொது மேலாளர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ மோகன் சி. லாசரஸ் பிரார்த்தனை ஏறெடுத்து மரக்கன்றை நட்டினார். விழாவில் கதிரவன், சரத்பாபு, நல்லூர் பஞ்சாயத்து எழுத்தர் முருகன்,ஏ.சி.எஸ்.கபாடி குழுவினர், பொது மக்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

ப. சுகுமார்Sep 19, 2021 - 11:36:18 PM | Posted IP 162.1*****

Good work.

ப. சுகுமார்Sep 19, 2021 - 11:32:53 PM | Posted IP 162.1*****

Good work.

ப. சுகுமார்Sep 19, 2021 - 11:28:49 PM | Posted IP 162.1*****

Good work.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory