» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாலை தடுப்பு சுவரில் கார் மோதி 2 பேர் பலி: 6பேர் படுகாயம்

ஞாயிறு 1, ஆகஸ்ட் 2021 10:36:36 PM (IST)

கயத்தாறு அருகே நாற்கரசாலை தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.. மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்கு வீதியைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவருடைய மகன் அரிகிருஷ்ணன் (29). இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு புறப்பட்டார். அப்போது அவர், தன்னுடைய நண்பரான காரைக்குடி கோட்டையூரைச் சேர்ந்த விக்கியையும் (28) அழைத்து சென்றார். இன்று காலையில் அவர்கள் திருச்செந்தூருக்கு சென்றனர். அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கோவிலுக்குள் பக்தர்களை அனுமதிக்கவில்லை. இதயடுத்து அவர்கள் அங்கிருந்து காரில் கன்னியாகுமரிக்கு சென்று விட்டு, பின்னர் மாலையில் காரைக்குடிக்கு புறப்பட்டனர். 

புதுக்கோட்டை மாவட்டம் துறையூர் கீரணிப்பட்டியைச் சேர்ந்த வெங்கடேசன் (25) காரை ஓட்டினார். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே அரசன்குளம் நாற்கரசாலையில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக கார் நிலைதடுமாறி சாலையோர தடுப்பு சுவரில் மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த விக்கி மற்றும் அரிகிருஷ்ணனின் தாத்தா கணபதி (88) ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அரிகிருஷ்ணன், அவருடைய மனைவி திவ்யபாரதி (27), மகள் கிருபாளினி (2), அரிகிருஷ்ணனின் தாயார் சீதா (53), உறவினரான காளியம்மாள், டிரைவர் வெங்கடேசன் ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory