» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி துறைமுகத்தில் விபத்து: கிரேன் ஆப்ரேட்டர் பலி
சனி 31, ஜூலை 2021 9:38:53 PM (IST)
தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பல் தளத்தில் இருந்து தவறி விழுந்து கிரேன் ஆப்ரேட்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி பி அன் டி காலனி 6வது தெருவை சேர்ந்தவர் கந்த வேல்முருகன் மகன் சுரேஷ் (42). இவர் தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் 7வது கப்பல் தளத்தில் கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இன்று இரவு 7 மணியளவில் டீ குடித்துவிட்டு மீண்டும் கிரைனை ஆப்பரேட்டர் செய்வதற்காக மேலே ஏறினார். 50 அடி உயரத்தில் ஏறும் போது திடீரென கால் தவறி கீழே விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தெர்மல் நகர் இன்ஸ்பெக்டர் ராதிகா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.