» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது
சனி 31, ஜூலை 2021 9:23:45 PM (IST)
செய்துங்கநல்லூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜா சுந்தர் தலைமையிலான போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது வாய்க்காங்கரை பாலம் அருகில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட செய்துங்கநல்லூர் தென்னஞ்சோலை தெருவைச் சேர்ந்த சாகுல்ஹமீது மனைவி சித்திமா (65) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 1கிலோ 150 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.