» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் மீது போக்ஸோ வழக்குப் பதிவு
சனி 31, ஜூலை 2021 11:17:48 AM (IST)
ஏரல் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள சிறுதொண்ட நல்லூர் கிராமம், கோட்டைகாடு தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மகன் செல்வகுமார் (31). இவர் பள்ளி மாணவியான 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவாக உள்ள செல்வகுமாரை போலீசார் தேடி வருகின்றனர்.