» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குடிபழக்கத்தை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை
சனி 31, ஜூலை 2021 11:12:25 AM (IST)
தூத்துக்குடியில் குடிபழக்கத்தை தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி 3 சென்ட் அந்தோனியார் புரத்தைச் சேர்ந்தவர் இசக்கிதுரை மகன் விக்னேஷ் (21) எலக்ட்ரிஷியனாக வேலைபார்த்து வந்தார். இவருக்கு மது பழக்கம் இருந்துள்ளது. இதனை அவரது தாயார் கண்டித்துள்ளார். ஆனால் அவரால் மதுபழக்கத்தை கைவிட முடியவில்லையாம். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த விக்னேஷ் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.