» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடிபழக்கத்தை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை

சனி 31, ஜூலை 2021 11:12:25 AM (IST)

தூத்துக்குடியில் குடிபழக்கத்தை தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி 3 சென்ட் அந்தோனியார் புரத்தைச் சேர்ந்தவர் இசக்கிதுரை மகன் விக்னேஷ் (21) எலக்ட்ரிஷியனாக வேலைபார்த்து வந்தார். இவருக்கு மது பழக்கம் இருந்துள்ளது. இதனை அவரது தாயார் கண்டித்துள்ளார். ஆனால் அவரால் மதுபழக்கத்தை கைவிட முடியவில்லையாம். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த விக்னேஷ் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory