» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி மீது தாக்குதல்: வியாபாரிக்கு போலீஸ் வலைவீச்சு!

சனி 31, ஜூலை 2021 10:35:37 AM (IST)

சாத்தான்குளம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை தாக்கிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள பழனியப்பபுரத்தைச் சேர்ந்தவர் வேதமுத்து மகன் நல்லத்தம்பி (42). இவர் கோவையில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜான்சிசகிலா (38), மகள் ஆகியோர் பழனியப்பபுரத்தில் இருந்து வருகின்றனராம். 

இந்நிலையில் நல்லத்தம்பி, மனைவி நடத்தையில் சந்தேகம்  கொண்டு மனைவி ஜான்சிசகிலாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஜான்சி சகிலா சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம்  உதவி ஆய்வாளர்  ஜாண்சன்  வழக்குபதிந்து  கணவர் நல்லத்தம்பியை  தேடி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory