» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கரோனா பாதிப்பு : ஒருவர் உயிரிழப்பு
சனி 31, ஜூலை 2021 8:18:38 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. ஒருவர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 55,066 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 24 போ் குணமடைந்தனர். இதுவரையில் 54,420பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனிடையே, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 85 வயது ஆண் கரோனாவால் உயிரிழந்தாா். இதனால், இந்நோயால் பலியோனோா் எண்ணிக்கை 394 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 252 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.