» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கொரோனா காலத்தில் சிறப்பாக சேவை ஆற்றிய டாக்டர் அன்புராஜனுக்கு விருது : ஆளுநர் வழங்கினார்!
வெள்ளி 30, ஜூலை 2021 3:55:06 PM (IST)
தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் சார்பில் கொரோனா காலத்தில் சிறப்பாக சேவை ஆற்றிய டாக்டர் அன்புராஜனுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விருது வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனத்தின் அறங்காவலரும், இவ்வூழியத்தின் சமூக சேவை நிறுவனமான புதுவாழ்வுச் சங்க செயலாளரும், திருநெல்வேலி புதிய பேரூந்து நிலையம் அருகிலுள்ள பீஸ் ஹெல்த் சென்டர் நிர்வாக இயக்குனருமான டாக்டர் அன்புராஜன் தலைமையில் அவரது குழுவினர் கொரோனா காலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பாக சேவையாற்றியமைக்கு தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் விருது வழங்கி கௌவரப்படுத்தியது.
விருதினை தமிழக ஆளுநர் மேதகு பன்வாரி லால் புரோகித் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர் டாக்டர் கே.செந்தில், பதிவாளர் ஆர்.ஆறுமுகம் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்ட னர். டாக்டர் அன்புராஜனுக்கு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ மோகன். சி.லாசரஸ் மற்றும் அறங்காவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.