» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொரோனா காலத்தில் சிறப்பாக சேவை ஆற்றிய டாக்டர் அன்புராஜனுக்கு விருது : ஆளுநர் வழங்கினார்!

வெள்ளி 30, ஜூலை 2021 3:55:06 PM (IST)



தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் சார்பில் கொரோனா காலத்தில் சிறப்பாக சேவை ஆற்றிய டாக்டர் அன்புராஜனுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விருது வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனத்தின் அறங்காவலரும், இவ்வூழியத்தின் சமூக சேவை நிறுவனமான புதுவாழ்வுச் சங்க செயலாளரும், திருநெல்வேலி புதிய பேரூந்து நிலையம் அருகிலுள்ள பீஸ் ஹெல்த் சென்டர் நிர்வாக இயக்குனருமான டாக்டர் அன்புராஜன் தலைமையில் அவரது  குழுவினர் கொரோனா காலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு  சிறப்பாக  சேவையாற்றியமைக்கு தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் விருது வழங்கி கௌவரப்படுத்தியது. 

விருதினை தமிழக ஆளுநர் மேதகு பன்வாரி லால் புரோகித் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர் டாக்டர் கே.செந்தில், பதிவாளர் ஆர்.ஆறுமுகம் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்ட னர். டாக்டர் அன்புராஜனுக்கு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ மோகன். சி.லாசரஸ் மற்றும் அறங்காவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory