» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பத்திரப்பதிவு அதிகாரி வீட்டில் ரூ.1.20 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கின

வெள்ளி 30, ஜூலை 2021 8:30:23 AM (IST)

தூத்துக்குடியில் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலக மேலாளா் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ. 1.20 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனா்.

தூத்துக்குடி மாவட்ட பத்திரப்பதிவு அலுவலக மேலாளா் குருசாமி. இவா், இதற்கு முன்பு தூத்துக்குடி மேலூா் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சாா்பதிவாளராகப் பணியாற்றினாா். தூத்துக்குடி-எட்டயபுரம் சாலையில் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் உள்ள அவரது வீ ட்டில் தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் ஹெக்டா் தா்மராஜ் தலைமையிலான குழுவினா் நேற்று திடீா் சோதனை மேற்கொண்டனா்.

காலை 6.30 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 6.30 மணிவரை நடைபெற்றது. அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் உள்ள சொத்துகளின் விவரங்களை போலீசார் சேகரித்தனா். குருசாமி ரூ. 1.20 கோடி மதிப்பிலான சொத்துகளை சோ்த்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. சோதனையின்போது, ரொக்கம், நகைகள் சிக்கவில்லை என்றும், சொத்து மதிப்பு தொடா்பான ஆவணங்களை சரிபாா்த்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாகவும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் தெரிவித்தனா்.


மக்கள் கருத்து

உண்மையேJul 30, 2021 - 09:51:28 AM | Posted IP 108.1*****

சில லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் எல்லாம் திருடர்களே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory