» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீடுபுகுந்து ரூ.7 லட்சம் நகை, பணம் கொள்ளை : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

வியாழன் 29, ஜூலை 2021 9:12:48 PM (IST)

கழுகுமலை அருகே பட்டப்பகலில் விவசாயி வீட்டில் ரூ.7 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே பிச்சைதலைவன்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் குற்றாலநாதன் (70), விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். குற்றாலநாதன் நேற்று காலையில் அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்துக்கு மனைவி, மகளுடன் சென்றார். அப்போது அவர்கள், வீட்டின் கதவை பூட்டி விட்டு சாவியை ஜன்னல் ஓரமாக வெளியில் மறைத்து வைத்து சென்றனர். மாலையில் குற்றாலநாதன் திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

மேலும் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை திறந்து, அதில் இருந்த 13 பவுன் நகைகள், ரூ.3½ லட்சம் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் ஆகும். இதுகுறித்து புகாரின் பேரில், கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். கைரேகை நிபுணர்கள் தடையங்களை சேகரித்தனர். பட்டப்பகலில் வீடு புகுந்து நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory