» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை
வியாழன் 29, ஜூலை 2021 11:37:51 AM (IST)
தூத்துக்குடியில் மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி கால்டுவெல் காலனியைச் சேர்ந்தவர் கந்தையா மகன் முத்துராஜ் (48). இவருக்கு மதுபழக்கம் இருந்துள்ளது. தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு செல்வாராம். இதனை அவரது மனைவி சக்திகனி கண்டித்துள்ளார். இதனால் மனவேதனையில் முத்துராஜ் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
adminJul 29, 2021 - 12:15:32 PM | Posted IP 162.1*****
குடி குடியை கெடுக்கும். அரசுக்கு அது வருமானம் கொடுக்கும்
ஆம்Jul 29, 2021 - 02:32:48 PM | Posted IP 108.1*****