» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோவில் உண்டியல் மூலம் ரூ.2.44 கோடி; 2¼ கிலோ தங்கம் வருவாய்!

புதன் 28, ஜூலை 2021 10:20:10 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஜூலை மாத உண்டியல் வருவாய் ரூ.2.44 கோடி கிடைத்துள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த மாதத்திற்கான (ஜூலை) உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் பணி நேற்று தொடங்கி 2 நாட்கள் நடந்தது. கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனரும், தக்கார் பிரதிநிதிமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், உதவி ஆணையர்கள் தூத்துக்குடி ரோஜாலி சுமதா, திருச்செந்தூர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், அறநிலையத்துறை ஆய்வாளர்கள் முருகன், சிவலோநாயகி, பொதுமக்கள் பிரதிநிதிகளாக வேலாண்டி, மோகன், சுப்பிரமணியன், கருப்பன் ஆகியோர் கலந்து கொணடனர். உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மட குருகுலம் வேதபாடசாலை உழவாரப்பணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல்களை திறந்து எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் நிரந்தர உண்டியல் மூலம் ரூ.2 கோடியே 28 லட்சத்து 47 ஆயிரத்து 635-ம், கோசாலை உண்டியலில் ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்து 758-ம், யானை பராமரிப்பு உண்டியலில் ரூ.30 ஆயிரத்து 105-ம், அன்னதான உண்டியலில் ரூ.13 லட்சத்து 43 ஆயிரத்து 866-ம், சிவன் கோவில் உண்டியலில் ரூ.40 ஆயிரத்து 53-ம், நாசரேத் கோவிலில் ரூ.4 ஆயிரத்து 938-ம், கிருஷ்ணாபுரம் கோவிலில் ரூ.7 ஆயிரத்து 907-ம், குலசேகரன்பட்டினம் அறம்வளர்ந்த நாயகி அம்மன் கோவிலில் ரூ.3 ஆயிரத்து 782-ம் என மொத்தம் ரூ.2 கோடியே 44 லட்சத்து 33 ஆயிரத்து 44 கிடைத்தது. மேலும், தங்கம் 2,255 கிராம், வெள்ளி 16,027 கிராம், அயல் நாட்டு கரன்சிகள் 46-ம் கிடைத்தன.

இக்கோவிலில் கடைசியாக கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி உண்டியல்கள் எண்ணப்பட்டு இருந்தது. அதன்பிறகு கொரோனா ஊரடங்கு காரணமாக கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் இம்மாதம் 5-ந் தேதி முதல் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தற்போது ஜூலை மாதம் உண்டியல்கள் எண்ணப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital









Thoothukudi Business Directory