» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மருத்துவமனை ஊழியர் உட்பட 3 இளம்பெண்கள் மாயம்!

புதன் 28, ஜூலை 2021 11:34:01 AM (IST)

தூத்துக்குடியில் தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் உட்பட 3 இளம்பெண்கள் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி அருகேயுள்ள வேப்பலோடை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தளவாய். இவரது மகள் மஞ்சு (21), தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாக வேலைபார்த்து வருகிறார். கடந்த 24ம் தேதி வேலைக்குச் செல்வதாக கூறிச் சென்றுள்ளார். அதன் பின்னர் வீடுதிரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை தருவைகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 

கோவில்பட்டியில்...

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நடராஜபுரத்தைச் சேர்ந்தவர் மணிராஜ். இவரது மகள் கோகிலா (17). இவரை கடந்த 25ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து அவரது தந்தை கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி் வருகிறார்.

மற்றொரு சம்பவம்

தூத்துக்குடி மாவட்டம், சூரங்குடி அருகேயுள்ள இ.வேலாயுதபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் ஈஸ்வரி (17). இவரை கடந்த 26ம் தேதி முதல் காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை சூரங்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கலா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory