» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
புதன் 28, ஜூலை 2021 11:17:48 AM (IST)
தூத்துக்குடியில் 2 குழந்தைகளுடன் தாய் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி கணேசன் காலனியைச் சேர்ந்தவர் செந்தட்டி. இவரது மனைவி சுடலை வடிவு (31), இந்த தம்பதியருக்கு பிரதீப் ராஜ் (10), பிரதாப் (8) என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சுடலை வடிவு கடந்த 24ம் தேதி 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் திரும்பிவரவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவர்களை பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவரது கணவர் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.