» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கறுப்பு கொடி கட்டியதால் பரபரப்பு
செவ்வாய் 27, ஜூலை 2021 10:13:03 PM (IST)
தூத்துக்குடியில் மிகவும் பிற்பட்டோர் இடஓதுக்கீடு விவகாரத்த்தில் கறுப்பு கொடி கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
எம்.பி.சி., எனப்படும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் பண்ணையார் சமுதாயத்திற்கு தை 20 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதத்துக்கு குறைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் பண்ணையார் சமுதாய மக்கள் தூத்துக்குடி லோகியாநகர், சுடலை காலனி, சிவந்தாகுளம் சந்திப்பு ஆகிய பகுதிகளில் கறுப்பு கொடிகள் கட்டினர். இதுகுறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு கட்டப்பட்டிருந்த கறுப்பு கொடிகளை அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
adminJul 28, 2021 - 10:10:37 AM | Posted IP 162.1*****