» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மத போதகரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: இந்து மக்கள் கட்சி கோரிக்கை!

திங்கள் 26, ஜூலை 2021 12:41:02 PM (IST)



மத போதகர் ஜார்ஜ் பொன்னையாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் தா.வசந்தகுமார் தலைமையில் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: குமரி மாவட்ட மதபோதகர் ஜார்ஜ் பொன்னையாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். ஆடி மாதம் அம்மன் கோயில்களில் கூழ்வார்க்கும் நிகழ்விற்கு இலவசமாக தானியங்கள் வழங்கிட வேண்டும். இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவி தொகை வழங்க வேண்டும். தனியார் மருத்துவமணைகளில் இலவசமாக தடுப்பூசி வழங்க வேண்டும், மின் கட்டணம் உயர்வை திரும்ப பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory