» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆட்சியர் அலுவலகத்தில் டாஸ்மாக் ஊழியர் தீக்குளிக்க முயற்சி : தூத்துக்குடியில் பரபரப்பு!!

திங்கள் 26, ஜூலை 2021 12:22:49 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், டாஸ்மாக் ஊழியர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சேர்ந்தவர்  பி.நாகராஜன். மாற்றுத்திறனாளியான இவர் விளாத்திகுளம் அருகே சிவஞான புரத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்பனையாளராக வேலைபார்த்து வருகிறார். கடந்த 5.10.2020ல் பணியில் சேர்ந்தார். இந்நிலையில், கடையின் மேற்பார்வையாளர் சரவணன் என்பவர் அவரது ஊனத்தை இழிவாகபேசி பணி செய்ய விடாமல் தடுக்கிறாராம். இதுகுறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர், உதவி மேலாளருக்கு நாகராஜன் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதனால் மனவேதனையடந்த நாகராஜன் இன்று ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அப்போது அவர் திடீரென தான்கொண்டு வந்த  மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றிவிட்டு தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த டிஎஸ்பி பொன்னரசு, சிப்காட் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அவரை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

ராஜாJul 27, 2021 - 04:35:28 PM | Posted IP 173.2*****

it is so sad

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory