» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நர்சிங் மாணவி உட்பட 2 இளம்பெண்கள் திடீர் மாயம்
செவ்வாய் 22, ஜூன் 2021 10:36:09 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் நர்சிங் கல்லூரி மாணவி உட்பட 2 இளம்பெண்கள் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள வேலவன் புதுக்குளம் கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமர். இவரது மகள் சுடலைவடிவு (22), திருச்செந்தூரில் உள்ள கல்லூரியில பிஎஸ்சி நர்சிங் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 19ம் தேதி முதல் இவரை காணவில்லை. இதுகுறித்து அவரது தந்தை சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளளார். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மற்றொரு சம்பவம்
ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள தங்கம்மாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தனசாமி. இவரது மகள் செல்வகனி (28). இவரை கடந்த 19ம் தேதி முதல் காணவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை சந்தனசாமி ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.