» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மணல் திருடிய 3பேர் கைது : ஜேசிபி இயந்திரம், லாரி பறிமுதல்!
சனி 19, ஜூன் 2021 4:29:39 PM (IST)
தூத்துக்குடி அருகே குளத்தில் மணல் திருடிய 3பேரை போலீசார் கைது செய்து, ஜேசிபி இயந்திரம், டிப்பர் லாரி மற்றும் 2 யூனிட் மணலை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் இம்மானுவேல் ஜெயசேகர் தலைமையிலான போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது எல்லைநாயக்கன்பட்டி குளத்தில், உரிய அனுமதியின்றி குளத்தில் ஜேசிபி இயந்திரம் மற்றும் லாரி மூலம் சரல் மணல் அள்ளிய ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நம்பி மகன் சங்கரலிங்கம் (40), சாயர்புரத்தைச் சேர்ந்த செந்தில் மகன் இசக்கிராஜா (26) மற்றும் பொட்டலூரணியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் மணிகண்டன் (22) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும், மேலும் அவர்களிடமிருந்து ஜேசிபி இயந்திரம், டிப்பர் லாரி மற்றும் இரண்டு யூனிட் மணலும் பறிமுதல் செய்யப்பட்டது.