» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்ஸோவில் வாலிபர் கைது
சனி 19, ஜூன் 2021 3:45:46 PM (IST)
கயததார் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்ஸோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருகேயுள்ள தெற்கு ஆத்திகுளம் கிராமம், மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் காளீஸ்வரன் (25), இவர் அப்பகுதியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தையின் தந்தை புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாககுமாரி விசாரணை நடத்தி, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து காளீஸ்வரனை கைது செய்தார்.