» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்ஸோவில் வாலிபர் கைது

சனி 19, ஜூன் 2021 3:45:46 PM (IST)

கயததார் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்ஸோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருகேயுள்ள தெற்கு ஆத்திகுளம் கிராமம், மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் காளீஸ்வரன் (25), இவர் அப்பகுதியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தையின் தந்தை புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாககுமாரி விசாரணை நடத்தி, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து  காளீஸ்வரனை கைது செய்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory