» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையா பதவியேற்பு

சனி 19, ஜூன் 2021 12:38:12 PM (IST)

ஓட்டப்பிடாரம் தொகுதியின் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சி.சண்முகையா இன்று பதவியேற்றுக் கொண்டார்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக சாா்பில் பி. மோகன், திமுக சாா்பில் எம்.சி. சண்முகையா, புதிய தமிழகம் கட்சி தலைவா் க. கிருஷ்ணசாமி உள்பட மொத்தம் 17 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இத்தேர்தலில் திமுக வேட்பாளா் 73,110 வாக்குகள் பெற்று தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் மோகனை விட 8,510 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

இந்நிலையில், உடல்நலக் குறைவால் பதவியேற்காமல் இருந்த சண்முகையா, இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு முன்னிலையில், எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக் கொண்டார். கடந்த 2019இல் நடைபெற்ற இடைத்தோ்தலில் வெற்றி பெற்ற எம்.சி. சண்முகையா, 2-ஆவது முறையாக எம்.எல்.ஏ.,வாக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory