» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ராகுல் காந்தி 51வது பிறந்த நாள் விழா: ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கல்!

சனி 19, ஜூன் 2021 11:05:05 AM (IST)



தூத்துக்குடியில் ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் காங்கிரஸ் கட்சியினர் உணவு அளித்தனர். 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.,யுமான ராகுல்காந்தியின் 51வது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி தலைமையில் மாசிலாமணிபுரம் மூன்றாவது தெருவில் உள்ள பாசக்கரங்கள் முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கபட்டது. 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காங்கிரஸ் செயலாளர் இக்னேஷ்யஸ், ஐஎன்டியூசி தலைவர் வீரையா, மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா. மாநில பேச்சாளர் அம்பிகாபதி, நிர்வாகிகள் அருள் வளன், ராஜசேகர், ஜெயமணி, நாராயணசாமி, நம்பி சங்கர், சிவாமூர்த்தி, மேகி, மரிய அனிதா, ஜெனிட்டா, பெத்து ராஜ், சேவியர் மிசியர், வீரன், நாராயணன், முருகப்பெருமான், பிரசாந்த் குமார், ராமர், முத்து, ரமேஷ் சிவலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

நலதிட்ட உதவிகள் வழங்கல்



தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி 51 வது பிறந்த நாளை முன்னிட்டு, மாநகர் மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் ஏழை-எளிய மக்களுக்கு அரிசி பைகள் மற்றும் முககவசம்,கபசுர குடிநீர் ஆகியவற்றை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு கிழக்கு மண்டல தலைவர் ஜசன்சில்வா தலைமை வகித்தார். 

இதில் மாநில மீனவரணி பொதுச்செயலாளர் ரொனால்டு வில்லவராயர், வடக்கு மண்டல தலைவர் சேகர்,மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நடேஷ்குமார், மாவட்ட எஸ்சி/எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் ராஜாராம், மாவட்ட துணை தலைவர்கள் பிரபாகரன், அருணாசலம், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா, மாவட்ட செயலாளர் கோபால், வார்டு தலைவர்கள் முத்துவேல்,மகாலிங்கம்,விமோலின்,பெத்துராஜ்,எட்வர்ட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தருவைக்குளத்தில்... 



தருவைக்குளத்தில் ராகுல் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் காமராஜர் சிலைக்கு வடக்கு மாவட்ட தலைவா் காமராஜ் தலைமையில் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் தெற்கு வட்டார தலைவா் கனேசன், வெள்ளப்பட்டி சவாியானந்தம், நிர்வாகிகள் அருண் பாண்டியன், ஜோஸ்வா, மாஸ்க் கென்னடி, தனசேகா், சந்திரபோஸ், ராஜா, தஸ்நேவிஸ்மணி, தாவீது ராஜா, மோகன்ராஜ், தங்கசாமி, மதி உட்பட பலா் கலந்து கொண்டனா்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory