» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்டெர்லைட் ஆலையில் 47.06 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் உற்பத்தி : ஆட்சியர் தகவல்
வெள்ளி 18, ஜூன் 2021 8:21:49 PM (IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 47.06 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் மற்றும் 43 உருளை வாயு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலுள்ள ஆக்ஸிஜன் அலகு திறக்கப்பட்டு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பணி துவங்கியது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செயல்பாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இன்று மாலை 6.00 மணி நிலவரப்படி 47.06 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் மற்றும் 301 NM3 (43 உருளை) உற்பத்தி செய்யப்பட்டது.
இதில், 7.99 மெட்ரிக் டன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைக்கும், 7.99 மெட்ரிக் டன் நாகப்பட்டிணம் அரசு மருத்துவமனைக்கும், 7.79 மெட்ரிக் டன் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைக்கும், 7.79 மெட்ரிக் டன் திருச்சி அரசு மருத்துவமனைக்கும், 5.17 மெட்ரிக் டன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி,மருத்துவமனைக்கும், 5.17 மெட்ரிக் டன் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கும், 5.1 மெட்ரிக் டன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கும், 43 உருளை ஆக்சிஜன் தென்காசி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
K.ganeshan . secretary, Thoothukudi makkal vazhvathara pathukappu sangam.Jun 18, 2021 - 09:41:30 PM | Posted IP 108.1*****