» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தாயின் நினைவு நாளில் நலஉதவிகள் வழங்கிய சமூக ஆர்வலர்

வெள்ளி 18, ஜூன் 2021 11:14:41 AM (IST)



தூத்துக்குடியில், தாயாரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சமூக ஆர்வலர் ஒருவர் ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகளை வழங்கினார். 

தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலாருமான சுப. மாடசாமி தனது தாயார் பேச்சியம்மாள் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 500பேருக்கு உணவு பொட்டலங்கள், 50 மூதாட்டிகளுக்கு சேலை, 50 பேருக்கு அரிசி, மற்றும் மரக்கன்றுகள் வழங்கினார். இந்நிகழ்வில் தூத்துக்குடி வட்டாச்சியர் ஜஸ்டின் செல்லத்துரை, மூத்த வழக்கறிஞர் அதிசயகுமார், ஒன்றிய பெருந்தலைவர் வசுமதி அம்பா சங்கர், துணை தலைவர் கோயில் மணி, காவல் ஆய்வாளர் ஜெயந்தி, ஊராட்சி தலைவர் சரவணக்குமார், காவல் உதவி ஆய்வாளர் வேல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

TUTICORIN MAKKALJun 18, 2021 - 03:46:17 PM | Posted IP 162.1*****

நல்ல மனிதர் நல்ல உள்ளம். வாழ்க வளமுடன்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital



Thoothukudi Business Directory