» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீரவாஞ்சிநாதனின் 110வது நினைவு தினம் அனுசரிப்பு
வியாழன் 17, ஜூன் 2021 4:40:24 PM (IST)
மணியாச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் வீரவாஞ்சிநாதனின் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
சுதந்திர போராட்ட வீரர், வீரவாஞ்சிநாதனின் 110வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி வாஞ்சி மணியாச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் அந்தணர் முன்னேற்ற கழகம் சார்பாக, அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. இந்நிகழ்ச்சியில், மாநில இளைஞரணி துனைச் செயளாலர் முத்துசிவம், தென்மாவட்ட அமைப்பாளர் விஸ்வநாதன், மாவட்ட பொருளாளர் செந்தில்நாதன் சிவம், உட்பட பலர் கலந்து கொண்டனர்
Muthu sivamJun 17, 2021 - 05:43:10 PM | Posted IP 162.1*****