» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தங்கையுடன் தகராறு: பள்ளி மாணவி தற்கொலை!!

வியாழன் 17, ஜூன் 2021 11:39:44 AM (IST)

ஆத்தூர் அருகே தங்கையுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள புன்னக்காயல் மரக்குடி தெருவைச் சேர்ந்தவர் அமலன். இவரது மகள் ஜெபின்ஷா (15), அங்குள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று குளிர்பானம் குடிப்பது தொடர்பாக ஜெபின்ஷாவுக்கு அவரது தங்கையுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதனால் மனவேதனையடைந்த ஜெபின்ஷா வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை எடுத்து குடித்துள்ளார். இதையடுத்து மயக்கம் அடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது வழ்ககுப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory