» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தங்கையுடன் தகராறு: பள்ளி மாணவி தற்கொலை!!
வியாழன் 17, ஜூன் 2021 11:39:44 AM (IST)
ஆத்தூர் அருகே தங்கையுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள புன்னக்காயல் மரக்குடி தெருவைச் சேர்ந்தவர் அமலன். இவரது மகள் ஜெபின்ஷா (15), அங்குள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று குளிர்பானம் குடிப்பது தொடர்பாக ஜெபின்ஷாவுக்கு அவரது தங்கையுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனவேதனையடைந்த ஜெபின்ஷா வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை எடுத்து குடித்துள்ளார். இதையடுத்து மயக்கம் அடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது வழ்ககுப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.