» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அமைச்சர் ரூ.10 லட்சம் தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் : திமுக., பிரமுகர் மீது வழக்குப்பதிவு
வியாழன் 17, ஜூன் 2021 11:03:33 AM (IST)
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ரூ.10 லட்சம் தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என வாட்ஸ்ஆப்பில் தகவல் பரப்பிய முன்னாள் தி.மு.க., நகர செயலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம, திருச்செந்துார், வீர பாண்டியன் பட்டினம், குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் மந்திரமூர்த்தி. தி.மு.க., முன்னாள் நகர செயலாளராக இருந்தவர். இவர் வாட்ஸ் ஆப் குரூப்பில், "தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், எனக்கு தர வேண்டிய ரூ.10 லட்சத்தை தராமல் ஏமாற்றி வருகிறார். நகர செயலாளர் பதவியை விட்டு விலகினால் செலவு செய்த பணத்தை திருப்பி தருவதாக கூறினார். இன்று வரை பணமும் வரவில்லை. பதவியும் வரவில்லை.
நான் ஏமாற்றப்பட்டதால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். எனக்கு சாவு ஏற்பட்டால் அனிதாவே காரணம். அமைச்சர் எனக்கு தரவேண்டிய தொகையை 15ம் தேதி காலை 10 மணிக்குள் தராவிட்டால் இந்த செய்தியை எல்லா குரூபபிலும் போட்டு விட்டு ஏமாந்தவன் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை. என் சாவுக்கு அமைச்சரே காரணம்" என பதிவிட்டுள்ளார். இதுகுறித்து தி.மு.க. நகர பொறுப்பாள சுடலை திருச்செந்துா கோயில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மந்திரமூர்த்தி மீது தற்கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசா வழக்குபதிவு செய்தனர். இதுகுறித்து இன்ஸ் பெக்டர் ஞானசேகரன் விசாரணை நடத்தி வருகிறார்.
kumarJun 17, 2021 - 11:24:04 AM | Posted IP 108.1*****