» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாலுமாவடியில் பள்ளி கட்டிடம்: சகோ. மோகன் சி. லாசரஸ் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்

திங்கள் 14, ஜூன் 2021 9:05:48 PM (IST)



நாலுமாவடியில் புதிய பள்ளிக்கட்டிட பணிகளை சகோ மோகன் சி. லாசரஸ் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். 

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடியில் ஸ்ரீ ஞானானந்த சன்மார்க்க கல்விச் சங்கம் சார்பில் தமிழ் வழி துவக்கப் பள்ளி, காமராஜர் மேல்நிலைப் பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இச்சங்கத்தின் சார்பில் ஆங்கில வழிக் கல்விக்காக காமராஜர் கான்வென்ட் பள்ளி புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா மும்மத பிராத்தனைகளுடன் நடைபெற்றது. 

காமராஜர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் திருநீலகண்டன் வரவேற்று பேசினார். இசக்கி யோகீஸ்வரர் இந்து மத பிரார்த்தனையை ஏறெடுத்தார். பள்ளிவாசல் இமாம் கயூப்கான், ஜின்னா முஸ்லீம் மத பிரார்த்தனையை செய்தனர். நாலுமாவடி சேகரகுரு கிரோக்ஸ்லி பிரேம் குமார் கிறிஸ்தவ மத பிரார்த்தனையை ஏறெடுத்தார். காமராஜர் கான்வென்ட் புதிய வகுப்பறைக் கட்டிடங்களை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சமூக சேவை அமைப்பான நாலுமாவடிபுதுவாழ் வுச்சங்கம் மூலம் கட்டி கொடுக்கப் படுகிறது.

காமராஜர் கான்வென்ட் அடிக் கல் நாட்டு விழாவிற்கு ஊராட்சி மன்றத்தலைவர்கள் நாலுமாவடி இசக்கிமுத்து, அங்கமங்கலம் பானுப்பிரியா,வீரமாணிக்கம் ஜெயஉமா, அழகப்பபுரம் பூமாரி பாலமுருகன், வரண்டியவேல் ஜெயக்கொடி, சுகந்தலை வெங்க டேசன், நாலுமாவடி இயேசு விடு விக்கிறார் ஊழிய அறங்காவலர் மருதநாயகம், நாலுமாவடி மோசஸ், யோகராஜ், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜனகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் நிறுவனர் சகோ மோகன் சி. லாசரஸ் புதிய வகுப்பறைக் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 

இதற்கான ஏற்பாடுகளை நாலு மாவடி காமராஜர் மேல் நிலைப் பள்ளி தலைவர் அழகேசன், செய லாளர் நவநீதன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலைராஜா, அசோக்ராஜ், சுதாகரன், தலைமையாசிரியர் திருநீலகண்டன், தனசேகரன் மற்றும் நாலுமாவடி இயேசு விடு விக்கிறார் ஊழியப் பொது மேலா ளர் செல்வக்குமார்,மக்கள்தொடர் புஅலுவலர் சாந்தகுமார் ஆகியோ ர் செய்திருந்தனர்.முடிவில் நாலு மாவடி காமராஜர் மேல்நிலைப் பள்ளி உதவிதலைமையாசிரியை மாலதி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து

kumarJun 15, 2021 - 12:03:24 PM | Posted IP 108.1*****

anaithu matha nambikayayum mathikkum panbu hindukkaluku iyarkayagave ullathu.... valthukkal...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory