» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்பிக் நிறுவனம் சார்பில் கரோனா நோயாளிகளுக்கு உணவு சமைக்க உதவி!!

திங்கள் 14, ஜூன் 2021 8:55:29 PM (IST)



தூத்துக்குடியில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு‌ உணவு சமைப்பதற்காக ஸ்பிக் நிறுவனம் சார்பில் அரிசி, பருப்பு எண்ணெய் வழங்கப்பட்டது. 

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு‌ ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மதிய உணவு சமைத்து கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு தேவையான அரிசி, பருப்பை ஸ்பிக் நிறுவன அதிகாரிகளிடம் கோரியிருந்தனர். இந்நிலையில், அரிசி, பருப்பு, மற்றும் எண்ணெய் ஆகியவற்றை ஸ்பிக் நிறுவனம் சார்பில் நிர்வாக அதிகாரிகள் ஜெயப்பிரகாஷ், அமிர்தா கௌரி ஆகியோர் ஜனநாயக மாதர் சங்கத்தின் நிர்வாகிகளிடம் வழங்கினர். மாதர் சங்க மாவட்டசெயலாளர் பி.பூமயில், புறநகர் துணைத் தலைவர் அனந்தம்மாள், சிஐடியு ஆட்டோ சங்கம் சார்பில் மலைக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory