» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்பிக் நிறுவனம் சார்பில் கரோனா நோயாளிகளுக்கு உணவு சமைக்க உதவி!!
திங்கள் 14, ஜூன் 2021 8:55:29 PM (IST)
தூத்துக்குடியில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு சமைப்பதற்காக ஸ்பிக் நிறுவனம் சார்பில் அரிசி, பருப்பு எண்ணெய் வழங்கப்பட்டது.
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மதிய உணவு சமைத்து கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு தேவையான அரிசி, பருப்பை ஸ்பிக் நிறுவன அதிகாரிகளிடம் கோரியிருந்தனர். இந்நிலையில், அரிசி, பருப்பு, மற்றும் எண்ணெய் ஆகியவற்றை ஸ்பிக் நிறுவனம் சார்பில் நிர்வாக அதிகாரிகள் ஜெயப்பிரகாஷ், அமிர்தா கௌரி ஆகியோர் ஜனநாயக மாதர் சங்கத்தின் நிர்வாகிகளிடம் வழங்கினர். மாதர் சங்க மாவட்டசெயலாளர் பி.பூமயில், புறநகர் துணைத் தலைவர் அனந்தம்மாள், சிஐடியு ஆட்டோ சங்கம் சார்பில் மலைக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.