» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர். திருமண நாள் விழா: நல திட்ட உதவிகள் வழங்கல்!
திங்கள் 14, ஜூன் 2021 4:25:45 PM (IST)
தூத்துக்குடியில் அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். ஜானகி திருமண நாள் விழாவை முன்னிட்டு 100 பேருக்கு அரிசி, காய்கறி தொகுப்புகள் வழங்கப்பட்டது,
தூத்துக்குடியில் தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. நிறுவனருமான எம்.ஜி.ஆர்-ஜானகி திருமண நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பாலவிநாயகர் கோவில் தெருவில் உள்ள கனிஸ் ஹோட்டல் கூட்ட அரங்கில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சத்யா இலட்சுமணன் தலைமையில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.சுதாகர் கலந்துகொண்டு ஏழை மக்கள் 100 பேருக்கு 5 கிலோ அரிசி, காய்கறி தொகுப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நட்டர்ஜி, எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட துணைச்செயலாளர் கே.மிக்கேல், மாவட்ட அமைப்புசாரா ஒட்டுநர் அணி துணைச் செயலாளர் பொன்னம்பலம், நகர எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் எஸ்.சாமுவேல், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் செங்குட்டுவன், பயணிகள் நலச்சங்க தலைவர் கல்யாணசுந்தரம், ஒருங்கிணைந்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள் ஜேசுராஜ், இரா.குமரவேல் நெப்போலியன், எம்.ஆர்.கிருஷ்ணன், கிருஷ்ணன், பரமசிவன், மாணிக்கம், ஆட்டோ தொழிற்சங்க முருகன், அந்தோணி, உட்பட திரளான பேர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை எம்.ஜி.ஆர் ரசிகர்கள் சத்யா இலட்சுமணன், பொன்னம்பலம், மிக்கேல், பி.சி.மணி, ஜேசுராஜ், நெப்போலியன் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.