» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடங்கியது!
திங்கள் 14, ஜூன் 2021 12:53:34 PM (IST)
தூத்துக்குடியில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை இன்று தொடங்கியது. பெரும்பாலான மாணவ-மாணவிகள் முதல் குரூப்பை தேர்வு செய்கிறார்கள்.
கரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு இடையே தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்கியது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பில் சேருவதற்கு மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் குவிந்தனர்.
10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இன்னும் வழங்கப்படாத நிலையில் மாணவர்கள் கேட்கும் பாடப்பிரிவுகளை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் சேர்க்கை நடந்தது.
தூத்துக்குடியில் மாநகராட்சி பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேருவதற்கு அதிக ஆர்வம் காட்டினார்கள். விரும்பிய பாடப்பிரிவுகளை வழங்க வேண்டும் என்று அரசு அறிவித்திருப்பதாலும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படாததாலும் விறுவிறுப்பாக சேர்க்கை நடைபெற்றது. இந்நிலையில், தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை துவங்கியது. மாணவர்கள் சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்து பெற்றோருடன் வந்து ஆர்வமாக சேர்ந்தனர். மாணவர்கள் விரும்பிய பிரிவில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர்கள் அனைவரும் வந்திருந்து மாணவர் சேர்க்கையை நடத்தினர்.
மக்கள் கருத்து
தில்லைக்காளி வல்லநாடுJun 14, 2021 - 07:24:10 PM | Posted IP 173.2*****
புதிய கல்வியாண்டு வாழ்த்துக்கள்
Mari MaruganJul 5, 2021 - 10:28:22 AM | Posted IP 173.2*****