» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பைக் எரிப்பு : போலீஸ் விசாரணை
திங்கள் 14, ஜூன் 2021 11:14:00 AM (IST)
தூத்துக்குடியில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக் , நள்ளிரவில் தீப்பற்றி எரிந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி 3வது மைல் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் வேலாயுதம் (37), அங்குள்ள பெட்ரோல் பங்கில் பம்ப் ஆபரேட்டராக வேலைபார்த்து வருகிறார். நேற்று வீட்டின் முன் நிறுத்தியிருந்த இவரது மோட்டார் பைக்கிற்கு நள்ளிரவு 2 மணியளவில் மர்ம நபர்கள் தீவைத்துள்ளனர். இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் வேலாயுதம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.