» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மேலும் 289 பேருக்கு கரோனா பாதிப்பு : ஒரே நாளில் 1023போ் குணமடைந்தனர்
ஞாயிறு 13, ஜூன் 2021 9:15:05 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 289பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்று ஒரே நாளில் 1023போ் குணமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இன்று 289 பேருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 52,351 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்த 1023போ் குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 48,398 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை 5போ் உயிரிழந்தனா். இதனால், பலி எண்ணிக்கை 348 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 3,619 போ் சிகிச்சையில் உள்ளனா்.