» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கார், வேன் கண்ணாடிகள் உடைப்பு: 2பேர் கைது!

ஞாயிறு 13, ஜூன் 2021 8:32:04 PM (IST)

தூத்துக்குடியில் கார், வேன் கண்ணாடிகள் உடைப்பு தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர் 

தூத்துக்குடி ராஜீவ் நகர், பர்மா காலனி நிக்கிலேசன் நகர், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளின் முன்பு நிறுத்தி இருந்த 9 கார், 2வேன், ஒரு ஆட்டோ ஆகிய வாகனங்களின் கண்ணாடிகளை நேற்று மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து வாகனங்களின் உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில், சிப்காட் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். 

மேலும், அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதாக தூத்துக்குடி அண்ணா நகர் 5வது தெருவைச் சேர்ந்த பிச்சையா மகன் பாரதி (25), அண்ணா நகர் 8வது தெருவைச் சேர்ந்த அருணாசலம் மகன் அஜித்குமார் (21) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். இதில், கைது செய்யப்பட்டுள்ள பாரதியின் தந்தை பிச்சையா தூத்துக்குடி நில மோசடி தடுப்பு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory