» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

ஞாயிறு 13, ஜூன் 2021 7:57:12 PM (IST)

தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள சிறுபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் மகன் சுரேந்திரன் (20) இன்று மாலை 5 மணி அளவில் இவர் தனது குடும்பத்துடன் அங்குள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்து புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த சுரேந்திரனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory