» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் உதவி ஆய்வாளர்கள் பொதுமாறுதல் : எஸ்பி தலைமையில் கலந்தாய்வுக்கூட்டம்!
ஞாயிறு 13, ஜூன் 2021 3:00:29 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர்கள் பொதுமாறுதலுக்கான கலந்தாய்வுக்கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் ஒரு வருடத்திற்கு மேலாக பணியாற்றும் 70 உதவி ஆய்வாளர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வுக்கூட்டம் இன்று (13.06.2021) மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் எஸ்பி பேசுகையில், "காவல் உதவி ஆய்வாளராகிய நீங்கள்தான் பொதுமக்களோடு இணைந்து களப்பணியாற்றுகிறீர்கள். நீங்கள் விருப்பப்பட்ட இடங்களுக்கு கலந்தாய்வின் அடிப்படையில் பணி மாறுதல் வழங்கப்படும். ஆகவே நீங்கள் சிறப்பான முறையில் பணியாற்ற வேண்டும். நீங்கள் சிறப்பாக பணியாற்றுகிறீர்கள் என்று பொதுமக்களிடமிருந்து பாராட்டுக்கள் வரவேண்டும். அதற்காக தவறு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில் எவ்வித காலதாமதமும் இருக்கக்கூடாது. பொதுமக்களிடமிருந்து வரக்கூடிய மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று" அறிவுறுத்தினார்.
கலந்தாய்வின்போது திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி கணேஷ், தூத்துக்குடி ஊரகம் பொன்னரசு, மணியாச்சி சங்கர், கோவில்பட்டி கலைக்கதிரவன், விளாத்திகுளம் பிரகாஷ், சாத்தான்குளம் காட்வின் ஜெகதீஷ் குமார், மாவட்ட தனிப்பிரிவ காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, மாவட்ட காவல்துறை அலுவலக கண்காணிப்பாளர் மாரியப்பன், உதவியாளர் சதீஷ் கண்ணன், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் கிறிஸ்டி, உமையொருபாகம் மற்றும் ஆகியோரும் உடனிருந்தனர்.