» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கார் கண்ணாடிகளை அடித்து உடைத்த மர்ம நபர்கள்: தூத்துக்குடியில் பரபரப்பு!!
ஞாயிறு 13, ஜூன் 2021 11:27:22 AM (IST)
தூத்துக்குடியில் கார், வேன் உள்ளிட்ட 9 வாகனங்களை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி ராஜீவ் நகர், பர்மா காலனி நிக்கிலேசன் நகர், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளின் முன்பு நிறுத்தி இருந்த 9 கார், ஒரு ஆட்டோ, ஒரு வேன் ஆகிய வாகனங்களின் கண்ணாடிகளை நேற்று மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து வாகனங்களின் உரிமையாளர்கள் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் பைக்கில் வந்த 3 வாலிபர்கள் கற்களால் வீசி காரை வாகனத்தையும் சேதப்படுத்தியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
adaminJun 14, 2021 - 05:11:57 PM | Posted IP 108.1*****