» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீடுபுகுந்து மூதாட்டியிடம் 7 பவுன் செயின் பறிப்பு
ஞாயிறு 13, ஜூன் 2021 11:23:44 AM (IST)
குரும்பூர் அருகே வீடுபுகுந்து மூதாட்டியிடம் 7 பவுன் செயின் பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள வெள்ளாளன்விளை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் மனைவி ராசாத்தி அம்மாள் (60) இவர் அந்த வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர் வீடு புகுந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் செயினை பறித்துச் சென்று விட்டார். இதுகுறித்து குரும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து, நகை பறித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.