» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் புதிதாக 296பேருக்கு கரோனா பாதிப்பு : மேலும் 6பேர் உயிரிழப்பு
சனி 12, ஜூன் 2021 9:29:27 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று புதிதாக 296பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நோய் பாதிப்பால் மேலும் 6பேர் உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில், மேலும் 296 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 52, 062 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்த 497 போ் குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 47,375 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை 6 போ் உயிரிழந்தனா். இதனால், பலி எண்ணிக்கை 343 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 4,353 போ் சிகிச்சையில் உள்ளனா்.