» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நாளை தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் : ஆட்சியர் தகவல்

சனி 12, ஜூன் 2021 5:41:38 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஜூன் 13)காய்ச்சல் பரிசோதனை, மாதிரி சேகரிப்பு மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா- 19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளுக்காக நோய்  கட்டுப்பாட்டு பகுதிகளில் கபசுர குடிநீர்  விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  மேலும் இருவேளை கிருமிநாசினி மூலம் தெளிப்பு தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.  நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கரோனா தொற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கரோனா பாதிப்பு கண்டறியும் பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் 13.06.2021 அன்று காய்ச்சல் பரிசோதனை, மாதிரி சேகரிப்பு மற்றும் தடுப்பூசி முகாம்கள் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும் இடங்கள்; தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் காலையில்; சேர்வைக்காரன்மடம், குலையன்கரிசல், செய்துங்கநல்லூர், வாகைவிளை, இடையர்காடு, னுஊறு குடியிருப்பு, சேர்ந்தமங்கலம், கடாட்சபுரம், ராஜீவ் நகர், காமராஜ் நகர், திருப்பதி நகர். கடம்பூர், கோடங்கல், கரடிகுளம், சி.ஆர். காலனி, அகிலாண்டபுரம், கரிசல்குளம், மேட்டுப்பட்டி, சித்தவநாயக்கன் பட்டி, காமராஜ் நகர்,

சுப்பிரமணியபுரம், டி.சுப்பையாபுரம், முத்துராமலிங்கபுரம், ஒட்டநத்தம், சங்கம்பட்டி, தென்னம்பட்டி, கவுண்டம்பட்டி, பள்ளிவாசல் பட்டி, புதூர், குளக்கட்டான்குறிச்சி, இராமசந்திரபுரம், லெட்சுமிபுரம் ஆகிய பகுதிகளிலும், மாலையில் ராஜபாளையம் ஹ{ண்டாய் வாகன விற்பனை நிலையம், செய்துங்கநல்லூர், வாகைவிளை, இடையர்காடு, னுஊறு குடியிருப்பு, சேர்ந்தமங்கலம், கடாட்சபுரம், ராஜீவ் நகர், காமராஜ் நகர், திருப்பதி நகர், கோடங்கல் காலனி, கழுகுமலை, குமாரகிரி, பேரிலோவன் பட்டி, குரளியம்பட்டி, வள்ளிநாயகிபுரம், மணியாச்சி, ஓம்சரவணாபுரம், கொத்தாளி, நாகலாபுரம், சென்னம்பட்டி, முத்தையாபுரம் ஆகிய பகுதிகளிலும் முகாம் நடைபெற உள்ளது.

எனவே பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட முகாம்களில் தவறாது கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும் 0461-2340101 மற்றும் 9486454714 ஆகிய தொலைபேசி எண்களிலும்  பொது மக்கள் கரோனா நோய்த் தொற்று குறித்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory