» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விளையாட்டு வீரர்களுக்கு விருது : ஆட்சியர் அழைப்பு

சனி 12, ஜூன் 2021 3:27:10 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் அர்ஜுனா விருது உள்ளிட்ட விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் "விளையாட்டுத் துறையில் நமது தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித் தரும் சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டுத் தொடர்புடையவர்கள் ஆகியோருக்கு பல்வேறு விருதுகளை இந்திய அரசு ஆண்டு தோறும் வழங்கி வருகிறது. 

அவ்வாறே, இவ்வாண்டிற்கான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது”, அர்ஜீனா விருது”, "துரோணாச்சார்யா விருது”, "தயான்சந்த் விருது” மற்றும் "ராஷ்ட்ரிய கேல் புரோட்ஸஹான் புரஸ்கார் விருது” ஆகிய விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இவ்விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் http://yas.nic.in மற்றும் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

விண்ணப்பங்களை  16.06.2021 அன்று மாலை 4.00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டரங்கம், ஜார்ஜ் ரோடு, தூத்துக்குடி என்ற முகவரிக்கு  அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் அடங்கிய உரை மேல் சம்பந்தப்பட்ட விருதினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு  7401703508 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital




Thoothukudi Business Directory