» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்
சனி 12, ஜூன் 2021 12:00:11 PM (IST)
பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து தூத்துக்குடி, நாசரேத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெட்ரோல், டீசல் வரலாறு காணாத விலை உயர்வைக் கண்டித்தும், கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்தும் தூத்துக்குடியில் சிபிஎம் சார்பில் சிதம்பரநகர் மெயின் ரோட்டில் மாநகர செயலாளர் ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மாவட்டக்குழு குமாரவேல், ஒன்றிய செயலாளர் சங்கரன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து, மாநகரக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், முத்துகிருஷ்னன், தசலிஸ், நாகராஜ், டென்சிங், செல்வம், காஸ்ட்ரோ, ஜேம்ஸ், பாலா, ஆவடையப்பன், முருகன், அலாய்சிஸ், நாகராஜன், தாமோதரன், வரதன், மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாசரேத்தில்
நாசரேத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செயலா் மாணிக்கம் தலைமை வகித்தாா். இதில், ஏஐடியூசி மாவட்டச் செயலா் கிருஷ்ணராஜ், எழுத்தாளா் ஆறுமுகப்பெருமாள், உதவிச் செயலா் சுந்தரம், செய்தித் தொடா்பாளா் டாக்டா் சாம் அமிா் தம், ஆட்டோ சங்க உறுப்பினா்கள் இஸ்ரவேல், சின்னத்துரை ஆகியோா் கலந்து கொண்டனா்.