» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தல் அறிவிப்பு: ஆக.15ல் தொடங்கி 4 கட்டங்களாக நடைபெறுகிறது!
சனி 12, ஜூன் 2021 11:01:42 AM (IST)
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு 15-ல் தொடங்கி 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல முதற்கட்ட தேர்தல் ஆகஸ்டு 15 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் சபை பிரதிநிதிகள் மற்றும் திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். இரண்டாவது கட்டமாக ஆகஸ்டு 28 ஆம் தேதி சேகர மன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் சேகர செயலாளர், பொரு ளாளர் மற்றும் சபைமன்ற பிரதி நிதிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
மூன்றாவது கட்டமாக செப் டம்பர் 18ஆம் தேதி சபை மன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் திருமண்டலத்திற்கு சபை மன்றத்திலிருந்து ஊழியர் பிரதிநிதிகள், மற்றும் நிலைவரக் குழுவிற்கான பிரதிநிதிகள் தேர்தல் நடக்கிறது. இறுதிக்கட்டமாக அக்டோபர் 20, 21 ஆகிய தேதிகளில் திருமண்டல பெருமன்றம் கூடி அலுவலக பிரதிநிதிகளான உபதலைவர், குருத்துவச் செயலர்,லே செயலர் திருமண்டல பொருளாளர் மற்றும் திருமண்டல கல்வி நிலைவரக் குழு செயலர் மற்றும் பல்வேறு பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.