» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு : 2பேர் கைது!

சனி 12, ஜூன் 2021 10:53:11 AM (IST)

கயத்தார் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிய 2பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருகேயுள்ள வெள்ளான்கோட்டை கிராமம், கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் மாரியப்பன் (65), இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு கயத்தாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு, நேற்று மாலை ஊர் திரும்பினார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

மேலும் வீட்டில் உள்ளே பீரோவில் இருந்த 2 கிராம் மோதிரம் மற்றும் ரூ.60ஆயிரத்து 600 ராெக்கப்பணம் திருடுபோயிருந்தது. இதுகுறித்து கயத்தார் காவல் நிலையத்தில் மாரியப்பன் புகார் செய்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, நகை பணத்தை திருடிய வெள்ளாளன் கோட்டை மேற்கு தெருவைச் சேர்ந்த பாலு மகன் இருளப்பன் (30), கிழக்குத் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் மணி (52) ஆகிய 2பேரை கைது செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory