» செய்திகள் - விளையாட்டு » உலகம்
லெபனான் மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல் : 20 பேர் பலி; 66 பேர் படுகாயம்!
திங்கள் 25, நவம்பர் 2024 8:49:13 AM (IST)

லெபனான் மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 20 பேர் பலியாகினர். மேலும் 66 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து கடந்த ஆண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் பலியாகினர். இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா மற்றும் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்படுகின்றனர். இவர்கள் இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த இஸ்ரேல் அவர்களது முகாமை குறிவைத்தும் தாக்குதல் நடத்துகிறது. அந்தவகையில் லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகைண தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் அங்குள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகள் தரைமட்டமாகின. மீட்பு படையினர் அங்கு விரைந்து கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இறங்கினர். அப்போது 20 பேர் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர். படுகாயம் அடைந்த 66 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாக். விமான தளங்களை அழித்தது இந்தியாவுக்கு கிடைத்த தெளிவான வெற்றி: போர் நிபுணர்
வியாழன் 15, மே 2025 5:36:04 PM (IST)

போர்களை முடிவுக்கு கொண்டு வர மத்தியஸ்தம்: புதிய போப் லியோ அறிவிப்பு!
புதன் 14, மே 2025 5:54:45 PM (IST)

மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியைக்கு 30 ஆண்டு சிறை: நீதிமன்றம் தீர்ப்பு !
செவ்வாய் 13, மே 2025 11:47:43 AM (IST)

பாகிஸ்தானுக்கு சரக்கு விமானம் மூலம் ஆயுதங்கள் அனுப்பவில்லை: சீனா திட்டவட்ட மறுப்பு!
செவ்வாய் 13, மே 2025 11:43:05 AM (IST)

பரஸ்பர வரிகளை குறைக்க சீனா, அமெரிக்கா ஒப்புதல் : வர்த்தக போர் முடிவுக்கு வந்தது!
திங்கள் 12, மே 2025 5:03:09 PM (IST)

போர் நிறுத்தத்தை செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளோம்: பாகிஸ்தான் அறிவிப்பு
திங்கள் 12, மே 2025 9:13:08 AM (IST)

இது தான் உலக ஊடகம்Nov 25, 2024 - 01:45:45 PM | Posted IP 162.1*****